எரமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் மலேரியா ஒழிப்பு மாதம் கொண்டாடப்பட்டது. இதில் பாப்பம்பட்டி வ்ட்டார மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கொசுக்களினால் பரவும் நோய்கள் பற்றியும் அது வராமல் தடுப்பது பற்றியும் வந்தபின் சிகிச்சை பெறுவது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் மகளிர் சுய உதவிகுழுவினர் ,ஊர் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் (அதிக அளவில் கலந்து கொண்டனர்) மற்றும் ஊராட்சிப்பணியாளர் கலந்து கொண்டனர்.இறுதியில் ஊராட்சி செயலர் நன்றி தெரிவித்தார்.
Featured Posts
2014/06/20
உலக சுகாதார நாள் ஊர்வலம்
எரமநாயக்கன்பட்டி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் சுகாதாத்துறையினர் கலந்து கொண்ட ”உலகசுகாதார நாள்” ஊர்வலத்தை பாப்பம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் தொடங்கிவைத்தார். ஊர்வலத்தில் டெங்கு,சிக்கன்குனியா,மலேரியா காய்ச்சலை உண்டு பண்னும் கொசுக்களை ஒழிப்போம்! ஒழிப்போம்!! என மாணவர்கள் முழக்கமிட்டு வந்தனர். இந்த ஊர்வலம் ஊர்பொதுமக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஊர்வலக் காட்சிகளில் ஒரு சில உங்கள் பார்வைக்கு........
Labels:
நிகழ்வுகள்-விழிப்புணர்வு
2014/06/19
Subscribe to:
Posts (Atom)